புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர பரீட்சை ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்படாது

புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர பரீட்சை ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்படாது

2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர உயர் தர பரீட்சை ஆகியவற்றினை திட்டமிட்ட வகையில் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாகஇ பாடத்திட்டங்களை உரிய வகையில் நிறைவு செய்ய முடியாததை அடுத்தேஇ இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.