சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தினால் அம்பாறை வைத்தியசாலை நிதியுதவி

சாய்ந்தமருது வர்த்தக சங்கத்தினால் அம்பாறை வைத்தியசாலை நிதியுதவி

நூருள் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ய சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  

நாட்டில் கொவிட் - 19 பரவலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் தேவை வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகிறது.

இந்த தேவையை பூர்த்தி செய்ய தமது பங்களிப்பை செய்யும் நோக்கிலையே சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் இந்த நிதியுதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், பொதுச் செயலாளர் எம்.எப். அப்துல் வாஸித்,  பொருளாளர் எம்.எம்.ஏ. றஹீம், நிறைவேற்று செயற்குழு உறுப்பினர்களான கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்.எம். றிஸ்மீர், ஏ.சி.இக்பால், எஸ்.எச். இக்பால் அடங்கிய குழுவினர் இந்த உதவித் தொகையை வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் உபுல் விஜயநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்.