புர்கா தடை; அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை

புர்கா தடை; அமைச்சரவை பத்திரம்  இன்று சமர்ப்பிக்கப்படவில்லை

நாட்டில் புர்காவிற்கு தடை விதிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முன்மொழிவு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இதற்மைய, இன்று (15) திங்கட்கிழமை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முன்மொழிவு தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் புர்காவிற்கு தடை விதிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவிலை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.