இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதில்லை: உயர் ஸ்தானிகர்

இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதில்லை: உயர் ஸ்தானிகர்

இலங்கையின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதில்லை

ஜனாஸா அடக்கம், நிகாப் விடயங்களில் எமது கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் கிடைத்தன

நிகாப் தடை அறிவிப்பு பாகிஸ்தானின் ஆதரவு திரட்டும் நடவடிக்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது

 

சமூ­கத்தின் நலன்­க­ளுக்­காக ஆட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுடன் ஓத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட வேண்டும் என இம்ரான் கான் முஸ்லிம் எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கினார்

இரண்டு தலை­வர்­க­ளையும் பிர­தமர் இம்ரான் கான் தனித் தனி­யாக சந்­தித்து பேச்சு நடத்­திய போது கொவிட் - 19 இனால் உயி­ரி­ழப்­போரை அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்தார்.

 

நேர்­காணல்: எம்.பி.எம். பைறூஸ், றிப்தி அலி

"இலங்­கையின் நீண்ட கால நட்பு நாடான பாகிஸ்தான் இலங்­கையின் இறை­யாண்­மைக்கு மதிப்­ப­ளித்து வரு­கின்­றது. பாகிஸ்தான் ஒரு­போதும் இலங்­கையின் உள் விவ­கா­ரங்­களில் தலை­யிட்­ட­தில்லை.

கொவிட் 19 ஜனாஸா அடக்கம் விட­யத்தில் எமது பிர­தமர் இம்ரான் கான் தனது இலங்கை விஜ­யத்தின் போது ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ருடன் தனித்­த­னியே பேச்சு நடத்­தினார். அதே­போன்­றுதான் நிகாப் தடை குறித்த அறி­விப்பு வந்­ததும் நாம் எமது கரி­ச­னையை இலங்கை அர­சுக்கு வெளிப்­ப­டுத்­தினோம்.

அந்த வகையில் இலங்கை அர­சாங்கம் இந்த விவ­கா­ரங்­களில் சாத­க­மான பதில்­களைத் தந்­தமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது" என இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னிகர்  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்­மது சாத் கட்டாக் தெரி­வித்தார்.

விடிவெள்ளி மற்றும் விடியல் இணையத்தளம் ஆகியவற்றுக்கு  வழங்­கிய விசேட நேர்­கா­ண­லி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

உயர்ஸ்­தா­னி­க­ரு­ட­னான நேர்­கா­ணலின் முழு விபரம் வரு­மாறு:

இலங்­கையில் கொவிட் - 19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­களை பல­வந்­த­மாக தகனம் செய்­த­மைக்கு எதி­ராக பாகிஸ்தான் குரல்­கொ­டுத்து வந்­தது. இந்த பல­வந்த தக­னத்­தினை இல்­லா­ம­லாக்க பாகிஸ்தான் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொண்­டது?

இலங்­கையின் நீண்ட கால நட்பு நாடான பாகிஸ்தான் இலங்­கையின் இறை­யாண்­மைக்கு மதிப்­ப­ளித்து வரு­கின்­றது. இலங்கை பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கிய அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பாகிஸ்தான் தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கி­யுள்­ளது.

இந்த பல­வந்த தகனம் தொடர்பில் எமது நாட்டின் கரி­ச­னை­யினை மரி­யா­தைக்­கு­ரிய வகையில் இலங்கை அர­சாங்­கத்­திடம் தெரி­வித்­த­துடன் தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கினோம். எவ்­வா­றா­யினும் இது உள்­நாட்டு விவ­காரம் என்ற அடிப்­ப­டையில் இலங்கை அர­சாங்­கமே தீர்­மா­னிப்­ப­தற்கு விட்டோம்.

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் இலங்­கைக்­கான விஜ­யத்தின் போது இந்த கட்­டாய தக­னமே பிர­தான பேசு­பொ­ரு­ளாக விளங்­கி­யது. இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் அவர் பேச்சு நடத்­தி­னாரா?

ஆம். இலங்கை விஜ­யத்தின் போது பிர­தமர் இம்ரான் கான் இதற்கு முக்­கி­யத்­துவம் வழங்­கி­ய­துடன் இது தொடர்பில் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டினார்.

இரண்டு தலை­வர்­க­ளையும் பிர­தமர் இம்ரான் கான் தனித் தனி­யாக சந்­தித்து பேச்சு நடத்­திய போது கொவிட் - 19 இனால் உயி­ரி­ழப்­போரை அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு இரு தலை­வர்­களும் சாத­க­மாக பத­ில­ளித்­த­துடன் இந்த விட­யத்­தினை விரைவில் கருத்தில் எடுத்து மீளாய்வு செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­தனர். இதற்­க­மைய பிர­தமர் இம்ரான் கான் நாட்டை விட்டுச் சென்ற 24 மணி­த்­தி­யா­லங்­க­ளுக்குள் நல்­ல­டக்­கத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இது ஓர் உணர்­வு­பூர்­வ­மான விடயம் என்­பதால் தூதுக்­குழு மட்­டத்­தி­லான சந்­திப்பில் இந்த விடயம் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை.

நாட்டில் நிகாப் தடை விதிப்­பிற்கு எதி­ராக பாகிஸ்தான் மாத்­தி­ரமே குரல் கொடுத்­தி­ருந்­தது. இதற்­கான காரணம் என்ன?

ஜெனீ­வா­வி­லுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இந்த பிரே­ர­ணைக்கு எதி­ராக இலங்­கைக்கு ஆத­ரவு தேடும் பணியில் பாகிஸ்தான் ஈடு­பட்­டி­ருந்­தது.

இந்த காலப் பகு­தி­யி­லேயே நாட்டில் நிகாப் தடை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது. இது பாகிஸ்­தானின் ஆத­ரவு திரட்டும் நட­வ­டிக்­கைக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யது.  எனினும் பின்னர் இலங்கை அர­சாங்கம் இந்த விட­யத்தில் சாத­க­மான பதிலைத் தந்­தது.

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணையின் போது இரண்டு முஸ்லிம் நாடுகள் மாத்­தி­ரமே பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தாக உள்­நாட்டில் பேசப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் தங்­களின் கருத்து என்ன?

இது­வொரு பிழை­யான கருத்­தாகும். ஜெனீவா பிரே­ர­ணை­யின்­போது பாகிஸ்தான் மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள்  எதிர்த்து வாக்­க­ளித்­தன.  இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக எந்­த­வொரு முஸ்லிம் நாடும் வாக்­க­ளிக்­க­வில்லை.

மாறாக பல முஸ்லிம் நாடுகள் இந்த வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­காமல் இருந்­தன.  பாகிஸ்தான் வெற்­றி­க­ர­மாக அதை ஆத­ரித்­தது. எவ்­வா­றா­யினும் நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கட்­டாய தகன விடயம் ஜெனீவா பிரே­ரணை தொடர்­பான வாக்­கெ­டுப்­பிற்கு சில தினங்­க­ளுக்கு முன்­னரே நீக்­கப்­பட்­டது. இந்த நீக்கம் சில மாதங்­க­ளுக்கு முன்னர் அமு­லா­கி­யி­ருந்தால் மேலும் சில முஸ்லிம் நாடுகள் நிச்­ச­ய­மாக இலங்­கைக்கு ஆத­ரவு அளிப்­பது குறித்து சிந்­தித்­தி­ருக்கும்.

இலங்கை இந்­தியா மற்றும் சீனா ஆகிய நாடு­க­ளுடன் கொண்­டுள்ள உற­வினை பாகிஸ்தான் எவ்­வாறு அவ­தா­னிக்­கின்­றது?

இந்­தியா இலங்­கையின் பாரிய அண்டை நாடாகும். இரு நாடு­க­ளுக்கும் இடையில் வர­லாற்று ரீதி­யான உறவு காணப்­ப­டு­கின்­றது. இந்த அடிப்­ப­டை­யி­லேயே இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வினை நாம் பார்க்­கின்றோம்.

நல்­லெண்ணம், ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஒரு­மைப்­பாடு இறை­யாண்மை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இரு தரப்பு உறவு காணப்­ப­டு­வ­தாக நாம் நம்­பு­கின்றோம். அது­போன்று இரு நாடு­களின் உள்­ளக விவ­கா­ரங்­களில் தலை­யீடு இல்­லாமல் இருப்­ப­தா­கவும் நாம் கரு­து­கின்றோம்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் அபி­வி­ருத்­தியின் பங்­கா­ள­ரா­கவும், நட்பு நடா­கவும் கடந்த பல தசாப்­தங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.  அது மாத்­தி­ர­மல்­லாமல், பாகிஸ்­தானைப் போன்று இலங்­கையும் சீனாவின் தி பெல்ட் அண்ட் ரோட் இனி­ஷி­யேட்­டிவின் பங்­கா­ள­ராக காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் வறுமை ஒழிப்பு மற்றும் வேலை­வாய்ப்­பின்மை போன்ற விட­யங்­க­ளுக்­காக இந்த செயற்­திட்­டத்தின் ஊடாக அதி­க­பட்ச நன்­மை­யினை இலங்கை அடையும் என நாம் எதிர்­பார்க்­கின்றோம்.

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தனது இலங்கை விஜ­யத்தின் இறுதி நேரத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை திடீ­ரென சந்­தித்­த­மைக்­கான காரணம் என்ன?

பிர­தமர் இம்ரான் கானின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பும் முன்­னரே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் நேரப் பற்­றாக்­குறை, பல எண்­ணிக்­கை­யான சந்­திப்­புக்­களின் கார­ண­மாக இந்த சந்­திப்­பிற்கு பொருத்­த­மான நேரத்­தினை ஒதுக்­கீடு செய்­வ­தற்­காக பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­லயம் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­தது. இதற்­கான சந்­தர்ப்பம் கிடைத்த போது கூட்ட நேரம் இறுதி செய்­யப்­பட்­டது.

இந்த சந்­திப்பின் போது பிர­தமர் இம்ரான் கான், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சில அறி­வு­ரை­களை வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றதே?  

இலங்கை தமது நாடு என்ற நோக்­குடன் மற்ற சமூ­கங்­க­ளுடன் இணக்­க­மாக வாழ பிர­தமர் அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தினார்.  தங்கள் சமூ­கத்தின் நலன்­க­ளுக்­காக ஆட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுடன் ஓத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட வேண்டும் எனவும் அறி­வுரை வழங்­கினார். நாட்டு சட்­டத்தை மதித்து நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக இலங்கை வாழ் முஸ்­லிம்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். இதனைத் தான் பாகிஸ்தான் பிர­த­மரும் கூறினார்.

பிர­தமர் இம்ரான் கானின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த பாரா­ளு­மன்ற உரை இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்கு ஏதேனும் விசேட கார­ணங்கள் உள்­ள­னவா?

பிர­தமர் இம்ரான் கான் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் கொவிட் – 19 சூழ்­நி­லை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்த உரை இலங்கை அர­சாங்­கத்­தினால் இரத்துச் செய்­யப்­பட்­டது.

யுத்த காலத்தில் இலங்­கைக்கு  பாகிஸ்தான் பாரிய உத­வி­யினை வழங்­கி­யது போன்று அடிப்­ப­டை­வாதத்­தினை ஒழிக்­கவும் உத­வுமா?

அடிப்­ப­டை­வாதம் மற்றும் தீவி­ர­வாதம் எல்லா நாடு­க­ளிலும் சமூ­கங்­க­ளிலும் உள்­ளன. பாகிஸ்­தானும்  இதனால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அடிப்­ப­டை­வா­தத்தை ஒரு­போதும் இஸ்­லாத்­துடன் இணைக்­கக்­கூ­டாது.

அடிப்­ப­டை­வாதம் சில நாடு­களால் இஸ்­லாத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கைக்கு அதன் உள் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண பாகிஸ்தான் பாது­காப்பு ரீதி­யாக உதவி வழங்­கி­யுள்­ளது. அடிப்­ப­டை­வாதம் மற்றும் தீவி­ர­வா­தத்தை ஒழிக்க இரு நாடு­களும் தொடர்ந்து இணைந்து செயல்­படும்.

இஸ்­லாத்தை ஒரு­போதும் தீவி­ர­வா­தத்தை போதிக்கும் மத­மாக  பார்க்­கக்­கூ­டாது. அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எல்­லைகள் இல்லை. அனைத்து இனங்­க­ளிலும் ஒரு குறிப்­பிட்ட சில  எண்­ணிக்­கை­யி­லான அடிப்­ப­டை­வா­திகள் உள்­ளனர். நாம் அனை­வரும் கூட்­டாக இணைந்து அவர்­களை நடு­நி­லை­வா­தி­க­ளாக மாற்ற முன் வர  வேண்டும்.

பௌத்த சுற்­றுலா மற்றும் கலா­சாரம் ஆகி­ய­வற்றை பிர­பல்­யப்­ப­டுத்­து­வதில் கொழும்­பி­லுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­லயம் அதிக கவனம் செலுத்­து­வ­தற்­கான காரணம் என்ன?

பௌத்த சுற்­றுல்லா மற்றும் கலா­சா­ரத்­திற்­கான சிறந்த இட­மாக பாகிஸ்தான் காணப்­ப­டு­கின்­றது. எனினும் பாது­காப்பு அச்­சு­றுத்தல் கார­ண­மாக கடந்த பல வரு­டங்­க­ளாக இரு நாடு­க­ளுக்கு இடையில் இந்த விடயம் ஆராயப்­ப­ட­வில்லை. இது­வொரு துர­திஷ்­ட­மாகும்.

எனினும், இரண்டு நாடு­களும் இணைந்து இதனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான காலம் தற்­போது கனிந்­துள்­ளது. பாகிஸ்­தா­னி­லுள்ள பௌத்த சுற்­று­லா­வினை மேம்­ப­டுத்­து­வதன் ஊடாக இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வினை மேலும் கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

இலங்கை – பாகிஸ்தான் வர்த்­தக மற்றும் முத­லீட்டு மாநாடு 2021 இன் ஊடாக ஏற்­பட்ட நன்­மைகள் என்ன?

பிர­தமர் இம்ரான் கானின் இலங்கை விஜ­யத்தின் முக்­கிய அம்­ச­மாக இந்த மாநாடு இடம்­பெற்­றது. இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­தக, முத­லீட்டு  உற­வினை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான தளத்­தினை வழங்­கு­வ­தற்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இந்த மாநாடு காணப்­பட்­டது.

பாகிஸ்தான் பிர­த­ம­ருடன் 38 முன்­னணி வர்த்­த­கர்­க­ளைக்­கொண்ட தூதுக் குழு­வொன்று இலங்கை வந்­தது. இந்த குழுவில் ஆடை, ஜவுளி, மருந்து உற்­பத்தி, விவ­சாயம் உணவு, நிர்­மாணம், வாகன உதி­ரிப்­பா­கங்கள், பாத­ணிகள் போன்ற பல துறை­களைச் சேர்ந்தோர் காணப்­பட்­டனர்.

இந்த மாநாட்டை தொடர்ந்து வியா­பா­ரி­க­ளி­டையே பிரத்­தி­யே­க­மாக வலை­ய­மைப்­பொன்றை உரு­வாக்கும் வகையில் சுமார் 200 கூட்­டங்கள் இடம்­பெற்­றன. இது பாரி­ய­ளவில் வெற்­றி­ய­ளித்­தது. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எதிர்­கா­லத்தில் இரு நாடு­க­ளுக்கும் இடையில் பல்­வேறு வியா­பார செயற்­பா­டுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

இலங்கை மாண­வர்கள் பாகிஸ்­தானில் உயர் கல்­வி­யினை மேற்­கொள்­வ­தற்கு வழங்­கப்­ப­ட­வுள்ள புல­மைப்­ப­ரி­சில்கள் பற்றிக் கூற முடி­யுமா?

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 1,000 இலங்­கை­யர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வி மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் ஏற்கனவே வழங்கப்படுகின்றது.  இதற்கு மேலதிகமாக, 100 இலங்கை மாணவர்கள் மருத்துவ துறையில் பாகிஸ்தானில் உயர் கல்வி மேற்கொவதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை பிரதமர் தனது விஜயத்தின் போது வெளியிட்டார். அவரின் விஜயத்தின் ஊடாகவே இவை கிடைக்கப் பெற்றமை விசேட அம்சமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி ரீதியான இராஜதந்திர தொடர்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த 100 புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

இலங்­கையின் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­வுடன் இணைந்தே இந்த புலமைப் பரி­சி­லிற்­கான தெரிவு மேற்­கொள்­ளப்­படும். இவ்­வ­றி­விப்பு விரைவில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­படும். இதற்­காக அனை­வரும் விண்­ணப்­பிக்க முடியும்.

இது அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்­கு­மா­ன­தாகும். பாகிஸ்­தா­னினால் வழங்­கப்­படும் புல­மைப்­பி­ரிசில் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மா­னது என்று சிலர் நினைக்­கின்­றனர்.  அது தவ­றா­ன­தாகும். அனைத்து இனத்­த­வர்­களும் பாகிஸ்­தா­னினால் வழங்­கப்­படும் அனைத்து உத­வி­க­ளிலும் உள்­ள­டக்­கப்­பட்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.