மாலைதீவு சபாநாயகர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

 மாலைதீவு சபாநாயகர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

மாலைதீவின் சபாநாயகரும், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியுமான முஹம்மத் நஷீத் மீது நேற்று (06) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

மிகவும் முக்கியமான இந்த நேரத்தில், இலங்கை மக்களும் அரசாங்கமும் அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், மாலைதீவு மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான தனது ஒற்றுமையை ஒன்றிணைந்து வெளிப்படுத்துகின்றன என வெளிநாட்டு அமைச்சு இன்று (07) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.