ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவராலயத்தினால் விகாரைக்கு நிதியுதவி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவராலயத்தினால் விகாரைக்கு நிதியுதவி

கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவராலயத்தினால் விகாரையொன்றின் திருத்த வேலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி கடுவலை அஷோகாராமாய விகாரைக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அஹமட் அலி அல் முல்லா, குறித்த விகாரைக்கு நேரடியாக விஜயம் செய்த போது இந்த நிதியுதவி விகாராதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக குறித்த விகாரையில் கல்வி பயிலும் சிறுவர்களுக்கும் தூதுவரினால் நன்கொடைகளை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 'சகிப்புத்தன்மை ஆண்டு' வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.