20 இல் கிண்ணியா நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள் தெரிவு

20 இல் கிண்ணியா நகர, பிரதேச சபைகளின் தலைவர்கள் தெரிவு

வெற்றிடமாகவுள்ள கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவன்னினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் குறித்த இரண்டு பிரதேச சபைகளினதும் தலைவர்கள் பதவியிழந்தமை குறிப்பிடத்தக்கது.