பிரதிப் பொலிஸ் மா அதிபரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; சஜித் பாராளுமன்றத்தில் குரல்

பிரதிப் பொலிஸ் மா அதிபரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; சஜித் பாராளுமன்றத்தில் குரல்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் பேஸ்புக் ஊடாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச இன்று (06) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பியதோடு அந்த ஊடகவியலாளரால் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அந்த விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம்  என்னவென்றும் எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.