SJB இனால் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

SJB இனால் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை  அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியாக செயற்பட்டுத்தப்பட்டு வரும் 'ஜன சுவய' திட்டத்தின் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் இன்று (06) செவ்வாய்க்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

'ஜன சுவய' திட்டத்தின் 20ஆவது கட்டமாக 2,320,000 ரூபா மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரம் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது குறித்த உபகரணங்கள் மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.  செந்தூர்பதிராஜாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட  துணைத் தலைவர் ராஜித சேனரத்னஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்இசெல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் 'ஜன சுவய' கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்த்கது.