கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்தது.

திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி முதல் 20ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு கொழும்பு - 13,14,15 ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு – 11,12 ஆகிய பிரதேசங்களில் குறைந்தளவான நீர் விநியோகம் விநியோகிக்கப்படவுள்ளது.

இதேவேளை, 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணி முதல் 20ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை 16 மணி நேர நீர் வெட்டு கொலன்னாவ, ராஜகிரிய, ஒபேசகபுர, மொரகஸ்முல்ல, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.