தேர்தலில் ரணிலே களமிறங்குவார்; தமிழ் கட்சிகள் சஜித்தை ஆதரிக்கமாட்டா என்கிறார் ஐ.தே.க முக்கியஸ்தர்

தேர்தலில் ரணிலே களமிறங்குவார்; தமிழ் கட்சிகள் சஜித்தை ஆதரிக்கமாட்டா என்கிறார் ஐ.தே.க முக்கியஸ்தர்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­கவே கள­மி­றங்­குவார் என அக்கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தனது பெயரை வெளிப்­ப­டுத்த விரும்­பாத குறித்த அக்கட்­சியின் முக்­கி­யஸ்தர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

"ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்­புக்­க­மைய கட்­சியின் தலை­வரே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். கட்­சியின் செயற்­கு­ழு­விலும் பாரா­ளு­மன்றக் குழு­விலும் இர­க­சிய வாக்­கெ­டுப்­பொன்று நடாத்­தப்­பட்டால் அதில் ரணில் விக்­ர­ம­சிங்­கவே வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­டுவார்.

அத்­துடன் சிங்­கள, தமிழ், முஸ்லிம் கட்­சிகள் இணைந்த கூட்­டணி ஒன்று விரைவில் தோற்­று­விக்­கப்­ப­ட­வுள்­ளது. பௌத்­தர்கள் உள்­ளிட்ட இலங்­கையின் சகல சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்கு ரணில் விக்கி­ர­ம­சிங்க போன்ற முதிர்ச்­சி­மிக்க சிரேஷ்ட தலை­வரே பொருத்­த­மா­னவர்.

தமிழ் கட்­சிகள் தாம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்கப்போவ­தில்லை என ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஏற்­க­னவே கணி­ச­மான பௌத்த மக்­களின் வாக்­குகள் உள்­ளன.

அத்­துடன் இம்­முறை முதன் முறை­யாக வாக்­க­ளிக்கும் இளைஞர், யுவ­தி­களின் வாக்­குகள் முக்­கி­ய­மாக அமையப் போகின்­றன. தமது தொகு­தி­களில் ஆத­ரவை இழந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில எம்.பி.க்களே சஜித் பிரே­ம­தா­சவை வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­து­கின்­றனர்.

இது கட்சியைக் கடுமையாகப் பாதிப்பதுடன் தோல்விக்கு இட்டுச் செல்லும் செயற்பாடு என்பதை அவர்கள் உணராதுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.