கரைச்சியில் மீளக்குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு ஜப்பான் ஆதரவளிப்பு

கரைச்சியில் மீளக்குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு ஜப்பான் ஆதரவளிப்பு

வட மாகாணத்தைச் சேர்ந்த மீளக் குடியேற்றப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 88,819 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

தனது Grant Assistance For Grassroots Human Security Projects (GGP) திட்டத்தின் ஊடாக இந்த உதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இந்த நன்கொடை வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் நடைபெற்றது.