கல்முனை மாநகர ஆணையாளராக சிவலிங்கம் நியமனம்

கல்முனை மாநகர ஆணையாளராக சிவலிங்கம் நியமனம்

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக பொறியியலாளர் என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் நாளை (01) வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவார்.

கல்முனை மாநகர ஆணையாளராக தற்போது செயற்படும் ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.