வெளிநாடு செல்பவர்களுக்கு PCR Report இன் Printout கட்டாயம்

வெளிநாடு செல்பவர்களுக்கு PCR Report இன் Printout கட்டாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Sri Lankan Airlines இல் நேற்று (07) வியாழக்கிழமை பயணித்த ஒரு நண்பர், PCR Report இன் Printout கட்டாயம் வேண்டும் என்று கூறி Airlines staff இனால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

Email / WhatsApp ஊடாக அனுப்பப்படும் குறித்த PCR Report இல் QR Code இருக்கிறது. அதை Scan பண்ணி verify பண்ணும் தொழிநுட்பம் நமது பாடாவதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்சிடம் 2021ஆம் ஆண்டிலும் இல்லை என்பதில் வியப்படைய ஏதும் இல்லை.

பின்னர் boarding pass எடுத்த பின்னர் அனுமதி பெற்று விமான நிலையத்தின் வெளிப்பகுதிக்கு வந்து பல முயற்சிகள் செய்தும் அவரால் printout எடுக்க முடியவில்லை.

மிகுந்த சிரமங்களுக்கு பின் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரின் உதவியுடன் printoutஐ பெற்று அவர் பயணிக்கவேண்டி ஏற்பட்டது. ஒன்றில் அவர்கள் PCR Report இன் Softcopyஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பயணிகளுக்கு Printout பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இரண்டும் இல்லாமல் பயணிகளை அலைக்கழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆகவே, விமானப் பயணிகளே!

விமான நிலையம் செல்லும் போது PCR Report இன் Printoutஐ கையோடு கொண்டு செல்லுங்கள். தங்கள் பயணம் பாதுகாப்பாக அமையட்டும்!

உவைஸ் மொஹைதீன்