அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபா நிதியுதவியை பெறத் தகுதியற்றோர் விபரம் வெளியீடு

அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபா நிதியுதவியை பெறத் தகுதியற்றோர் விபரம் வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் 5,000 ரூபா நிதியுதவியை பெறத் தகுதியற்றோரின் விபரம் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை வெளியீடப்பட்டடுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்று கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கிராம சேவகர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடித்திலேயே  அரசாங்கத்தின் நிதியுதவியை பெறத் தகுதியற்றோரின் விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.