வெலிகமயில் உயிரிழந்த முஸ்லிம் பெண்மனிக்கு கொரோனா தொற்றில்லை என அறிவிப்பு

வெலிகமயில் உயிரிழந்த முஸ்லிம் பெண்மனிக்கு கொரோனா தொற்றில்லை என அறிவிப்பு

வெலிகம பிரதேசத்தில் நேற்று (07) வியாழக்கிழமை உயிரிழந்த முஸ்லிம் பெண்மனிக்கு கொரோனா தொற்றில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெலிகம நகர சபையின் தவிசாளர் ரெஹான் டி. டப்ளியூ. ஜயவிக்ரம தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த பெண்மணியின் ஜனாஸா, அவருடைய சமய நம்பிக்கைப் படி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

54 வயதான குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ளார். எனினும் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் ஜனாஸாவினை நல்லடக்கம் செய்ய வெலிகம பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.