ராஜித சேனாரத்தனவிற்கு விளக்கமறியல்

ராஜித சேனாரத்தனவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவினை எதிர்வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவானினால் முன்னாள் அமைச்சர் ராஜின சேனாரத்னவிற்கு வழங்கியிருந்த பிடியாணையினை இரத்துச் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தில் அவர் இன்று மாலை சரணடைந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.