காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜௌபர் கான் இராஜினாமா

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஜௌபர் கான் இராஜினாமா

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல். ஜௌபர் கான் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று (14) வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி காத்தான்குடி நகர சபை உறுப்பினராக இவர் செயற்பட்டார்.

"கட்சித் தலைமையினால் ஒப்படைக்கப்பட்ட அமானிதமான குறித்த பதவியை தலைமைத்துவத்திற்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் அமைய இராஜினாமாச் செய்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்"  என ரீ.எல்.ஜௌபர் கான் தெரிவித்தார்.