கிணற்று நீர் வற்றும் விவகாரம்: மக்கள் அச்சமடைய தேவையில்லை

கிணற்று நீர் வற்றும் விவகாரம்: மக்கள் அச்சமடைய தேவையில்லை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கிணற்று நீர் வற்றும் விவகாரம் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் சில பிரதேசங்களில்  கிணற்று நீர் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கல்முனை பொலிஸாரின் அவசர வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளனர்.

அதாவது, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை பிரதேசங்களில் கிணறுகளில் நீர் மட்டம் குறைவதாகவும் அனர்த்தம் ஏற்படப் போவதாகவும் பலர் தெரிவிக்கின்ற விடயம் வதந்தி எனவும் இது தொடர்பில் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்