கொழும்பு மேயராக இக்பாலை நியமிக்கும் சாத்தியம்

கொழும்பு மேயராக இக்பாலை நியமிக்கும் சாத்தியம்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கொழும்பு மாந­கரசபையின் மேயர் பத­வி­யி­லி­ருந்து ரோஷி சேனா­நாயக்­கவை நீக்­கி­விட்டு, பிரதி மேய­ராக இருக்கும் எம்.ரீ.எம்.இக்­பாலை மேயர் பத­வியில் அமர்த்­து­வது தொடர்பில் ஆராயப்­பட்டு வரு­வதாக தெரி­விக்­கப்­படு­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ராக இருந்த ரோஷி சேனா­நாயக்­கவின் புதல்வர், சஜித் பிரே­ம­தாஸ தலைமை­யி­லான ஐக்­கிய மக்கள் சக்­திலின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக போட்டியிடுவதுடன் மேயர் ரோஷி அக்கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே மேயர் பதவியிலிருந்து ரோசியை நீக்குவதற்கான தீர்­மா­ன­மொன்றை கட்சி மட்டத்தில் மேற்­கொள்ள நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டு வருவ­தாக தெரிய வருகி­றது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்கொழும்பு மாநா­கர சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பி­னர்­களை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவுக்கு அழைத்து பேச்சு நடத்­தப்­பட்டது. ஆனால், கொழும்பு மாநா­கர மேயர் ரோஷி சேனா­நாயக்க இதில் கலந்துகொண்டிருக்கவில்லை.

எனினும் கொழும்பு மேயராக நானே தொடர்ச்சியாக செயற்படுவேன் என ரோசி சேனாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.