கல்முனை பிராந்தியத்தில் சமய நிகழ்வுகளுக்கு தடை விதிப்பு: சுகாதார பணிப்பாளர்

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் சமய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அத்துடன் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடல் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டதினை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.

அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (24) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.