மூன்று மு.கா எம்.பிக்கள் கட்சி பதவியிலிருந்து இடைநிறுத்தம்

மூன்று மு.கா எம்.பிக்கள் கட்சி  பதவியிலிருந்து இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சியில் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போதுஇ கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாதமையினாலேயே இவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.