பாராளுமன்ற தேர்தல் திகதி தொடர்பான அறிவித்தல் நாளை வெளியிடப்பட்டும்

பாராளுமன்ற தேர்தல் திகதி தொடர்பான அறிவித்தல் நாளை வெளியிடப்பட்டும்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள திகதி தொடர்பான  அறிவித்தல் நாளை (03) புதன்கிழமை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக  தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும், பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களையும் விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (2) செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது.

இதனையடுத்தே  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்ற தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜுன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.