ஜனாதிபதி – பாக். பிரதமர் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி – பாக். பிரதமர் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலொன்று இன்று (25) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் இரு தரப்பு உறவு மற்றும் பிராந்திய நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர். கொவிட் - 19 ஒழிப்பிற்காக இலங்கை செயற்பட்ட விதத்தினை பாகிஸ்தான் பிரதமர் இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை தொடர்பில் இம்ரான் கான் ஜனாதிபதிக்கு விளக்கினார்.