கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படும்: சுகாதார அமைச்சர்

கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படும் என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவின் சிபாரிசுக்கமையவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சமய விவகாரங்களினால் இந்த செயற்பாடு வாபஸ் பெறப்படாது என அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.