அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கான அங்கீகாரம் இன்று (03) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 5,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி விலக்கு விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.