மே மாதத்திற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

மே மாதத்திற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (03) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்த கொடுப்பணவு நாளை (04) முதல் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய மே மாதத்திற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.