6 நாட்களுக்குள் பதிவாகிய இறுதி 1,000 கொவிட் மரணங்கள்

6 நாட்களுக்குள் பதிவாகிய இறுதி 1,000 கொவிட் மரணங்கள்

நாட்டில் தற்போது கொவிட் - 19 மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருகின்ற நிலையில் கடந்த ஆறு நாட்களுக்குள் இறுதி 1,000 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று (21) சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம் கடந்த வெள்ளிக்கிழமை (20) கொவிட் காரணமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 7,183  பேர் கொவிட் காரணமாக இதுவரை இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, முதல் 1,000 மரணங்கள் 418 நாட்களில் பதிவாகியிருந்தது. இரண்டாவது 1,000 மரணங்கள் 23 நாட்களில் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது 1,000 மரணங்கள் 19 நாட்களிலும், நான்காவது 1,000 மரணங்கள் 25 நாட்களிலும், ஐந்தாவது 1,000 மரணங்கள் 15 நாட்களிலும், ஆறாவது 1,000 மரணங்கள் 8 நாட்களிலும் பதிவாகியிருந்தது.

இவ்வாறான நிலையில் ஏழாவர் 1,000 மரணங்கள் 6 நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.