'புர்காவினை தடை செய்யுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகளே பரிந்துரை செய்தனர்'

'புர்காவினை தடை செய்யுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகளே பரிந்துரை செய்தனர்'

நாட்டில் புர்காவினை தடை செய்ய வேண்டும் எனும் பரிந்துரையினை முஸ்லிம் அரசியல்வாதிகளும், எதிர்கட்சி அரசியல்வாதிகளுமே முன்வைத்தனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லை என கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமன்றி, ஜனாதிபதி ஆணைக்குழுவும் இதே பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளேன். எதிர்வரும் நாட்களில் இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறினார்.