ரஞ்சன் ராமனநாயக்கவின் உயிருக்கு ஆபத்து: சஜித்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனையினை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ரஞ்சன் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) திங்கட்கிழமை காலை அங்குனகோலாபெலஸ்ஸ சிறைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நிலை குறித்து சுக துக்கங்களை விசாரித்து அறிந்துகொண்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தற்போதைய சட்ட நிலைமையை விளக்கிய சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை உடனடியாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயிர் ஆபத்து உள்ளது என்றும், இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தனது கட்சி எப்போதும் முன் நிற்கிறது என்றும் அவர் கூறினார்.