கிழக்கு ஆளுநர் - பாக். உயர்ஸ்தானிகர் சந்திப்பு

கிழக்கு ஆளுநர் - பாக். உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு  பெற்ற) முஹமட் சாட் கட்டாக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, ஆளுநர் செயலகத்தில் , நேற்று (28) நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் இதற்காக பூரணமான உதவி ஒத்தாசைகளை வழங்குவதாகவும் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சுற்றுலா அபிவிருத்தி, விவசாய துறை உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுக்குக் கைகோர்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு ஆளுநரால் உயர் ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.