தனிப்பட்ட காரணங்களுக்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை: சிராஸ்

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தேர்தலில் போட்டியிடவில்லை: சிராஸ்

தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டேன் என கல்முனை மாநகர முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

நான் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் என்னால் கூறப்பட்டதாக வெளிவந்துள்ள அறிக்கைக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னணி வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் இவர் களமிறங்குவார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையிலேயே குறித்த தேர்தலிலிருந்து இவர் தவிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.