மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 24ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மிக முக்கியமான முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றான மாவனல்லை ஸாஹிரா கல்லூரியானது இவ்வருடம் தனது நூற்றாண்டினைப் பூர்த்தி செய்துள்ளது.

எனினும் நாட்டின் சுகாதார நிலைமைகள் காரணமாக நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீட்டு நிகழ்வானது இணைய வெளி ஊடாகவே நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன்படி இந்நிழ்வானது கல்லூரியின் உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தின் ஊடாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24ம் திகதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இலச்சினை வெளியீட்டு நிகழ்வைக் தொடர்ந்து எதிர்வரும் வாரங்களில் இரத்ததான முகாமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறுபட்ட  நிகழ்வுகளும் நாட்டின் நிலைமைகள் சீரானதன் பின்னர் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.