சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றசாட்டின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – 05 இலுள்ள தகவல் திணைக்களத்தில் இன்று (15) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உறுதிப்படு;த்தினார்.

இந்த சம்பவ விசாரணைகளின் போது, இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவினரின் பொறுப்பின் கீழ் 119 பேரும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் 78 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரரான றியாஜ் பதியுதீனுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் தொடர்பிருந்ததாக அவர் மேலும் கூறினார்.