புதிய இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கம்

புதிய இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிதாக இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியினால் வெளியிப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், சிறுவர்  விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட முதலீட்டு உக்குவிப்பு சபை, கொழும்பு துறைமுக நகர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உள்ளிட்ட 15 நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.