அல்- ஜலால் வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகளுக்கு தடை

அல்- ஜலால் வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டிடத்தின் நிர்மாண பணிகளுக்கு தடை

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்த்திடத்தின் கீழ் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படும் மூன்று மாடி கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பாடசாலை வேலைகளுக்கான பணிப்பாளர் பீ. பேராசிரியனால் நேற்று (28) புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன் பிரதிகள் மாகாண கல்வி பணிப்பாளர், கல்முனை வலய கல்வி அதிகாரி மற்றும் கல்முனை மாவட்ட  பாடசாலை வேலைகளுக்கான பொறியியலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்குமாறு குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.