பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும், பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த 10 நாட்களாக சமர்ப்பிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (01) நிறைவடைந்தது. இந்த நிலையிலேயே குறித்த தீர்ப்பு இன்று (02) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் அறிவிக்கப்பட்டது.