எனக்கு வாக்களிக்க வேண்டாம்: மங்கள சமரவீர

எனக்கு வாக்களிக்க வேண்டாம்: மங்கள சமரவீர

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன். இதனால் தனது விருப்பு இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (09) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மாத்தறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்ற இவர், இந்த தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.