தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கலையரசன் நியமனம்

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கலையரசன் நியமனம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த இவர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களை கைப்பற்றியது. எனினும் அம்பாறை மாவடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை அக்கட்சி இழந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தவராசா கலையரசன், அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.