சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியாஸ் பதவி உயர்வு

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக  நியாஸ் பதவி உயர்வு

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிகபணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு இவருக்குக் கிடைத்துள்ளது.

1984ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக இணைந்து கொண்ட இவர், அதன்பின்னர் பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று தற்போதைய நிலையை அடைந்துள்ளார்.

சட்ட முதுமாணியான சம்சுதீன் நியாஸ், CASE LAWS OF CUSTOMS எனும் நூலையும் எழுதியுள்ளார். இவர், தனது பாடசாலைக் கல்வியை, அட்டாளைச்சேனை அல் - முனீரா வித்தியாலயம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றுள்ளார்.