காணியற்ற 150 பேருக்கு உறுதி பத்திரங்கள் வழங்கல்

காணியற்ற 150 பேருக்கு உறுதி பத்திரங்கள் வழங்கல்

எம்.ஜே.எம்.சஜீத்

காணி  சீர்திருத்த  ஆணைக்குழுவின்  பதுளை மாவட்டத்திற்கான புதிய கட்டிடம்  திறக்கும் நிகழ்வு நேற்று (20) புதன்கிழமை இடம்பெற்றது.

காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர்  நிலாந்த விஜேசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காணி அமைச்சர்   எஸ்.எம். சந்திரசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

அத்துடன் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய  கொள்கையின் அடிப்படையில் 150 காணி உறுதி பத்திரங்கள் மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்  தொழிலாளர் அமைச்சரும் பதுளை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிரிபால டி சில்வா, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு  குழு தலைவருமான டிலான் பெரேரா, கிராமிய பாடசாலை வீதி உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் தேனுக விதான கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த குமார், சுதர்சன தெனிபிடிய ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.