20க்கு பின்னரான சூழ்நிலை குறித்து மு.கா ஆராய்வு

20க்கு பின்னரான சூழ்நிலை குறித்து மு.கா ஆராய்வு

20ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு பின்னரான சூழ்நிலை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற குழு இன்று (23) விரிவாக கலந்துரையாடியது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.