வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது NGO செயலகம்

வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது NGO செயலகம்

இதுவரை காலமும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான தேசிய செயலகம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (17) புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட  2215/20ஆம் இலக்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான தேசிய செயலகம் உள்ளடக்கப்பட்டது.

இவ்வாறன நிலையிலேயே குறித்த செயலகம் வெளிநாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.