மட்டு. மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டு. மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ நியமன கடிதத்தினை இன்று  (24) வெள்ளிக்கிழமை அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நியமனத்திற்காக அமைச்சரவை அங்கீகாரம் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறுவதற்கு முன்னர் , கிழக்கு மாகாண சபை பேரவை செயலாளராக அவர் கடமை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் திங்கட்கிழமை அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.