மு.காவிற்கு சஹ்ரானுடன் எந்த தொடர்புமில்லை: ஹக்கீம்

மு.காவிற்கு சஹ்ரானுடன் எந்த தொடர்புமில்லை: ஹக்கீம்

கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடனோ அல்லது அவரது குழுவினருடனோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவித தொடர்புமில்லை என அக்கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் இலாபமடையும் நோக்கில்  முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுதாக ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

கண்டி, பிலிமத்தலாவ நகரில் நேற்று (15) திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.