lockdowndனில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் வரையறுக்கப்பட்ட சேவைகள்

lockdowndனில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் வரையறுக்கப்பட்ட சேவைகள்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை காலகட்டத்தில் அவசரமான/உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு சேவைகளை வழங்க வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு தீர்மானித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு முடக்கநிலை காலப்பகுதியில் மூடப்பட்டிருப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு மற்றும் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் தொடர்பான கொன்சியூலர் சேவைகளை மட்டும் கட்டாயமான முன் நியமன அடிப்படையில் வழங்கும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு விடயங்கள் தொடர்பான சேவைகளை பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் வழங்கும்.

இந்த சேவைகளுக்கான முன்நியமனங்களைப் பதிவு செய்வதற்கு கொன்சியூலர் அலுவல்கள் பிரிவை பின்வரும் வகையில் தொடர்புகொள்ளவும்:

தொலைபேசி: 011 2335942, 011 2338812

மின்னஞ்சல் consular@mfa.gov.lk.