வளத்தாப்பிட்டியில் சில பகுதிகள் மூடக்கம்

வளத்தாப்பிட்டியில் சில பகுதிகள் மூடக்கம்

சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களுக்குள் 47 கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகளை முடக்க தீர்மானித்ததாக டாக்டர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.