சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஊடக அமைப்புக்கள் கோரிக்கை

சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஊடக அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அண்மையில் கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்தா ஹேரத், பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஊடக அமைப்புக்களினால் வேண்டப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஊடக மாநாட்டின் பின்னர் ஒரு பத்திரிகையாளர் குழுவுடன் உரையாடியபோது அவர் கூறிய கருத்துக்களுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்தே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன.