சஜிதுடன் கைகோர்கிறார் சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அதிறுப்தியுற்றுள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் ஜக்கிய தேசிய முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்ம் இடையில் இன்று (01) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் அதிறுப்தியுற்றுள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம உள்ளிட்ட பல தொகுதி அமைப்பாளர் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை முதல் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச கலந்துகொள்ளும் அனைத்துக் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொள்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

-றிப்தி அலி-