மானவனெல்லை தஸ்லீமுக்கு பொலிஸ் திணைக்களத்தினால் 2.5 மில்லியன் ரூபா பரிசு

மானவனெல்லை தஸ்லீமுக்கு பொலிஸ் திணைக்களத்தினால் 2.5 மில்லியன் ரூபா பரிசு

மானவனெல்லை பிரதேசத்தில் அடிப்படைவாதிகளினால் புத்தர் சிலை தகர்ப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய எம்.ஆர். தஸ்லீமுக்கு பொலிஸ் திணைக்களத்தினால் 2.5 மில்லியன் ரூபா பணப் பரிசு இன்று (18) புதன்கிழமை வழங்கப்பட்டது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகரவினால் குறித்த பணப் பரிசு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.